பருத்தித்துறையில் திடீர் 'தீ'; வாகனங்கள் எரிந்து நாசம்

பருத்தித்துறைப் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதிசொகுசு பேருந்து திடீரெனத் தீ பற்றி முழுமையாக எரிந்ததுடன் அருகில் நின்ற ஹையஸ் வாகனமும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. அத்துடன், ஹையஸ் வாகனத்துக்கு அருகில் நின்ற முச்சக்கர வண்டியும் வீட்டின் ஒரு பகுதியும் இதன்போது தீப்பிடித்துச் சேதமடைந்தன.இவ்வனர்த்தம் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பரியாரியார் வீதி - கலட்டியில் உள்ள வீடு ஒன்றில் அதிசொகுசு பேருந்து, ஹையஸ் வாகனம், முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தன. இச் சம்பவம் இடம்பெற்றபோது மூன்று வாகனங்களினதும் உரிமையாளர் வீட்டில் இருக்கவில்லையெனவும் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கரவெட்டி தினகரன் நிருபர் )

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை