வேலைவாய்ப்பு வழங்குமாறு வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி வடமாகாண பட்டதாரிகள்,வட மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக நேற்று இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. குறித்த அலுவலகம் முன்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கிய வாறு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான நியமனத்தை கால தாமதமி ன்றி விரைந்து வழங்க வேண்டும்.பட்டதாரிகளை உள்வாரி, வெளிவாரி எனப் பிரித்துப்பாரக்க வேண்டாம். படித்தவர்களுக்கு வேலை வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை எழுதிய வாசகங்களைத் தாங்கியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை