தென் மாகாண பாடசாலைகள் தொடர்ந்து மூடல்

சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை (26)  மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர்  ஹேமால் குணசேகர தெரிவித்தார்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து  அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஏற்கனவே நேற்றையதினமும் (24) இன்றையதினமும் (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவ்விரு மாவட்டங்களிலும் நாளை மற்றும் நாளை மறுதினமும் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.   

குறித்த இரு மாவட்டங்களிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Wed, 09/25/2019 - 11:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை