இலங்கை ஆசிரியர் சங்கம் நாடுதழுவிய போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கம், அதிபர் ஆசிரியர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார். 

1997ஆம் ஆண்டு முதல் நிலவும் சம்பளப் பிரச்சினை, கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் , அரசியல் நியமனங்கள், ஓய்வூதியும் மற்றும் அதிக வேலைப்பளு உள்ளிட்ட சில காரணிகளுக்குத் தீர்வை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியதுடன், 30இற்கும் அதிகமான ஆசிரிய தொழிற்சங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.  

தீர்வை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை எவ்வித கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Sat, 09/14/2019 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை