பலஸ்தீன பெண் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொலை

ஜெரூசலம் மற்றும் வடக்கு மேற்குக் கரைக்கு இடையே உள்ள கலந்தியா சோதனைச் சாவடியில் கத்தி ஒன்றை ஏந்தி வந்த குற்றச்சாட்டில் பலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேலிய படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சோதனைச் சாவடியின் வாகன வழியாக அடயாளம் தெரியாத “தீவிரவாதி” பாதுகாப்பு படையினரை அணுகியபோது நிற்கும்படி கோரியதை பொருட்படுத்தவில்லை என்று இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் மிக்கி ரொசன்பீல்ட் தெரிவித்தார். அந்தப் பெண் கத்தியை வெளியே எடுத்ததை அடுத்து காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவருக்கு சம்பவ இடத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும் அவர் உயிரிழந்ததாக ஜெரூசலத்தின் ஹதசாஹ் மருத்துவமனை அறிவித்தது.

குறுகிய தூரத்தில் இருந்து பாதுகாப்பு படையினர் பெண் ஒருவர் மீது அவரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது மற்றும் அந்த பெண்ணிடம் இருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை