எல்ல காட்டுப்பகுதியில் மரநடுகைத்திட்டம்

எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் அதிகளவான மரங்கள் அழிவடைந்துள்ளமையால் 'சேவ் எல்ல' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் புதிய மரக்கன்றுகள் அண்மையில் நடப்பட்டன. இந் நிகழ்வுகள் ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தலைமையில் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் தொண்டு நிறுவனங்கள், கெப்பிடல் மகாராஜா நிறுவன அதிகாரிகள், இராணுவ வீரர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை