வெற்றியில் பங்காளராகுங்கள்; முஸ்லிம்களுக்கு கோட்டாபய அழைப்பு

அரசியல் எதிராளிகள் தன்னை பற்றி பொய்ப்பிரசாரம் மேற்கொள் வதாகவும் அதற்கு ஏமாறாமல் வெற்றியின் பங்காளராகுமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ​வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் அடங்கலான சகல இன மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிலாபம் கடையாமோட்டை ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற மத அனுஷ்டானங்களில்

 

பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம்களிடையே என்னை பற்றி தவறான கருத்துகள் பரப்படுகிறது.கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களிப்பதற்கும் இவ்வாறான பிரசாரமே காரணமாக அமைந்தன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளன.கடந்த 5 வருடத்தில் நாடு பின்னடைந்துள்ளது.

இந்த ஆட்சி நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் நாசமடையும்.நான் நாட்டை நேசிக்கும் சகல இன மத்தினரையும் மதிக்கும் கட்சியினூாக தான் போட்டியிடுகிறேன். நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் நாம் பெரு வெற்றியீட்டுவோம்.

இந்த வெற்றியில் நீங்களும் பங்காளராகுங்கள்.பொய்ப்பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம். நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமைகள் ஏற்பட்டமை அனைவருக்கும் தெரியும். சகல இனமத மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.(பா)

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை