ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தையை ஐ.தே.முன்னணி இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்பேன்

ஏகாதிபத்திய போக்கில் தனிப்பட்ட கருத்துக்களை வெற்றிக்கொள்ளாமல் ஐ.தே. முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இணக்கப்பாட்டுடன் அடைந்து கொள்வதாக ஐ.தே.க. பிரதி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கண்டி அஸ்கிரிய பீடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற வைபவமொன்றில் பங்கேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், ஐ.தே.க. வேட்பாளர் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் காணப்பட்ட போது எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு நான் செவி சாய்ப்பேன். எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் எனக்கு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பிரதேச சபை தேர்தலை விட நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது பாரிய சவாலான விடயமாகும்.

இன, மத, கட்சி பேதங்களுக்கு

அப்பால் நாட்டை சௌபாக்கியத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வது எனது நோக்கம். கடந்தகால தலைவர்களையோ அரசுகளையோ விமர்சிக்க தயாராக இல்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களும் இந்த நாட்டுக்காக உழைத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது என்றார்.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை