பரபரப்பு சூழ்நிலை;
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக கட்சியின் செயற்குழு நாளை புதன்கிழமை காலை கூடவுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான அஜித் பி. பெரேரா தினகரனுக்குத் தெரிவித்தார்.
நாளை (புதன்கிழமை) காலை நாங்கள் கூடுகிறோம். அதேவேளை நாளை பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான
சஜித் பிரேமதாச மத்துகமையில் மாபெரும் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவது பற்றிப் பேசலாம் என்று அஜித் பி. பெரேரா தினகரனுக்குக் கூறினார்.
சஜித் பிரேமதாசவின் பெயர் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம். அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால் மாற்றுத் திட்டமொன்று பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
from tkn