காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி

வவுனியா நொச்சியாகம, ஈச்சங்குளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், 45வயதுடைய ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜேசெனரத் அநுர வன்னிநாயக்க எனும் சிவில்  பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இவர், நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Sat, 09/07/2019 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை