சஜித் இன்றேல் ஐ.தே.க.வுக்கு தோல்வியே

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக்கியே தீருவோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமல் வேறு ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.க தோல்வியை தழுவுவது உறுதியாகியிருப்பதால் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியே தீருவோமென பிரதியமைச்சர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.

கட்சி தோல்வியை தழுவுமென அறிந்தும் அதற்கு ஒத்துழைப்பதிலும் பார்க்க  அரசியலிலிருந்து விலகிச் செல்வதே மேல் என்றும் அவர் கூறினார். முதலீட்டு ஊக்குவிப்புச் சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்காவிட்டால் கட்சி பெரும் தோல்வியை தழுவுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தெரிந்து கொண்டும் அவரை தேர்தலில் நிறுத்தா விட்டால் நாம் அரசியல் செய்வதில் அர்த்தமில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-,... ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் களமிறங்குவார் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். பாராளுமன்றம், சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் மத்திய செயற்குழு என்பவற்றில் அமைச்சர் சஜித்துக்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு. அவர் தேர்தலில் போட்டியிட்டால் இலகுவாக வெற்றிபெற முடியும் என அனைவருக்கும் தெரியும். அமைச்சர் சஜித் ஜனாதிபதியாவதை தடுக்கும் வகையில் பலர் சதி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

 

 

Sat, 09/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை