ஐந்து குடும்பத்தினரை கொன்ற அமெ. சிறுவன்

அமெரிக்காவின் அலபாமாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை தாம் கொலை செய்ததாக 14 வயது சிறுவன் ஒருவன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளான்.

அந்த சிறுவனின் தந்தை, அவரது இரண்டாவது மனைவி மற்றும் அவனது சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அச்சிறுவன் அவனது குடும்பத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை.

மேலும், அவனது கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை