வாழைச்சேனை அந்நூர் மாணவன் ஐமனுக்கு கிழக்கு மாகாணத்தின் சிறந்த வீரருக்கான விருது

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் ஏ.ஆர்.ஐமனுக்கு கிழக்கு மாகாணத்தின் சிறந்த வீரருக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய குண்டெறிதல் போட்டியில் கலந்து கொண்ட அப்துர் ரகுமான் ஐமன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இதில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குறித்த மாணவன் 640 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று கிழக்கில் சாதனை வீரருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

இச் சாதனையானது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளது என்று கல்வி வலயம் அறிவித்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் சாதனை மாணவன் ஏ.ஆர். ஐமனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததேடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் ஏனைய அதிகாரிகளும் நேரில் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வாழைச்சேனை விசேட நிருபர்)

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை