எல்லே விளையாட்டு போட்டி

145 வது உலக தபால் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை ரீதியிலான எல்லே விளையாட்டு போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/9/2019) களுத்துறை வேர்ணன் பெர்ணான்டோ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டிகளில் மேல் மாகாண வடக்கு தபால் பிரிவுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியதுடன் இரண்டாம் இடத்தை ஆண்கள் பிரிவில் வடமேல் மாகாண எல்லே அணியும் அதேபோல் பெண்கள் பிரிவில் ஊவ மாகாண எல்லே அணியும் கைப்பற்றின, மாகாண மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஏழு மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 300க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளின் பிரதான பரிசளிப்பு வைபவம் அண்மையில் குருநாகலில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை சுழற்சி நிருபர்

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை