சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.ஏ. சூலவன்ச ஸ்ரீலால் தனது 68ஆவது வயதில் நேற்று (21) காலை காலமானார். சுமார் மூன்று மாத காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது பிறந்த தினமான நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘எத்த’ (Aththa - ඇත්ත) எனும் சிங்களப் பத்திரிகையின் மூலமாக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த சூலவன்ஸ சுமார் 40 வருடகாலமாக ஊடகத்துறையில் பிரகாசித்தவராவார்.
இடைப்பட்ட காலத்தில் ‘லங்காதீப’ பத்திரிகையிலும் சேவையாற்றிய அவர் 1994 காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
அதன் பின்னர் சுதந்திர ஊடகவியலாளராக குறிப்பிட்ட காலம் இயங்கி வந்தார்.
ரொய்ட்டர் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான ரங்க ஸ்ரீலால் (மகன்) அமெரிக்காவில் டொக்டராகப் பணிபுரியும் டொக்டர் சாமி அத்தநாயக்க பமுனு ஆரச்சி (மகள்) ஆகியோரின் தந்தையாவார்.
அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பத்தரமுல்ல ராஜசிங்க மாவத்தை (ஐ.ரி.என் தொலைக்காட்சி நிலைய வீதி) இலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (23) திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
from tkn