ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்

ரஷித் கான்

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தலைவராக பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2017-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. 2018-ல் இந்தியாவுக்கு ஏதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 2-வது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடியது.

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் படுதோல்வியடைந்ததால் ரஷித் கான் மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவரது தலைமையில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் களம் இறங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அணியின் தலைவராக பணியாற்றுவது எனக்கு புதியவை. முடிந்த அளவிற்கு என்னுடைய சிறந்த திறனை வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

பங்களாதேஷ் அணிக்கு நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கிறோம். எங்களை விட அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால், பங்களாதேஷை கண்டு நாங்கள் பயப்படவில்லை’’ என்றார்.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை