ஹரீஷாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது

மருதமுனையைச் சேரந்த எம்.சி.ஹரீஷா இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இளங்கலைஞர் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளளார்.

இவரது கவிதைகள் இலங்கையின் தேசியப்பத்திரிகைகளில் பிரசுரமாகி வருவதுடன், வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் 'உன் மொழியில் தழைக்கிறேன்', 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

சிறுவயதிலேயே கலை இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டதன் காரணமாக 2000ஆம் ஆண்டில் 'உன்னை மட்டும்'என்ற கவிதையின் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார்.

இதுவரை இருநூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும்,பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது பல ஆக்கங்கள் சுனாமி அனர்த்தத்தில் அள்ளுண்டு போனமை கவலைக்குரியதே.

நூலகராகப் பணிபுரிந்து வரும் இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார்.

 

(மருதமுனை தினகரன் நிருபர்)

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை