கொலம்பியாவில் விமானம் விழுந்து ஏழு பேர் பலி

வடமேற்கு கொலம்பியாவில் சிறிய விமானம் ஒன்று விழுந்த விபத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நிறுவனம் ஒன்றினால் செயற்படுத்தப்படும் விமானம் பபாயான் விமான நிலையித்தில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வீடுகளுக்கு மேலால் விமானம் விழுந்திருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் தரையில் இருந்த குழந்தை ஒன்று காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருவதாக கொலம்பிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை