கேள்வி உள்ள துறையில் கற்றால் தொழில் வாய்ப்பு இலகு

பட்டப்படிப்புக்கான பாடநெறிகளை தெரிவு செய்யும் போது, சந்தையில் எந்த துறையில் அதிக கேள்வி காணப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத்துறையில் தேர்ச்சி பெற்றால் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு கடினமான விடயமல்ல என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். 

கொழும்பு சுசமயவர்தன மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர்  முஸம்மில் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

இப் பரிசளிப்பு  விழா (19) புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

பட்டதாரிகள் தங்கள் நியமனங்களைப் பெற்றுக்கொள்ள அரசியல் உதவிகள் தேவை என்ற நிலைப்பாட்டிலுள்ளனர். அந்த நிலைப்பாட்டை நாம் இம்முறை மாற்றியமைத்துள்ளோம். இம்முறை நியமனங்கள் வழங்கும் போது, எந்தவொரு வேண்டுகோள்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து நாம் நியமனங்களை வழங்கவில்லை. வெளிப்படைத்தன்மையாகப் பரீட்சை வைத்து, முடிவுகளை இணையத்தளங்களில் வெளியிட்டு, தகுதியானவர்களைத் தெரிவு செய்தோம். அந்த நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

Sat, 09/21/2019 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை