சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்கள் பாதிப்பு

தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 08 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதோடு, 20, 815 குடும்பங்களைச் சேர்ந்த 80,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் களு கங்கை, கிங் கங்கை, நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக, நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Wed, 09/25/2019 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை