2nd ODI; SLvPAK: பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

2nd ODI; SLvPAK: பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு-2ODI-SLvPAK-Pak Won the Toss and Elected to Bat

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்றுவரும் (30) இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பந்து வீச அழைக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த இத்தொடரின் முதலாவது போட்டி கடும் மழை காரணமாக, எவ்வித பந்துவீச்சும் இடம்பெறாது கைவிடப்பட்டிருந்தோடு, இரண்டாவது போட்டி நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் மழை காரணமாக இன்று (30) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி
அவிஷ்க பெனாண்டோ, ஓஷத பெனாண்டோ, லஹிரு திரிமான்ன, சதீர சமரவிக்ரம, தனுஷ்க குணதிலக, ஷெஹான் ஜயசூரியா, தசுன் ஷானக, இசுரு உதான, வணிந்து ஹசரங்க, நுவன் பிரதீப், லஹிரு குமார

பாகிஸ்தான் அணி
பக்கர் சமான், இமாம் உல் ஹக், பார்பர் அசாம், ஹரிஸ் சொஹைல், இப்திகார் அஹமட், சர்பராஸ் அஹமட், இமாத் வசீம், வஹாப் ரியாஸ், ஷாதாப் கான், முஹம்மட் அமீர், உஸ்மான் ஷின்வாரி

Mon, 09/30/2019 - 16:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை