நாட்டில் உள்ள பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் வருடாந்த ‘ஒப்சேர்வர் மொபிடல் விருது’ வழங்கும் வைபம் (20) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது, ஆண்டின் சிறந்த பாடசாலைக் கிரிக்கெட் வீரராக கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் கமில் மிஷார தெரிவு செய்யப்பட்டார்.
கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் கமில் மிஷார பிரதம அதிதி அரவிந்த சில்வாவிடமிருந்து விருது பெறுவதையும், தனது கிரிக்கெட் அணியுடன் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிருஷாந்த பிரசாத் குரே, மொபிடெல் நிறுவனத் தலைவர் பி.ஜி. குமாரசிங்க சிறிசேன, லேக்ஹவுஸ் பொது முகாமையாளர் அபய அமரதாஸ, ஒப்சர்வர் பிரதம ஆசிரியர் தர்ஷா பெஸ்டியன் ஆகியோரையும் படங்களில் காணலாம். (படம்: றிஸ்வான் சேகு முகைதீன்)
Sun, 09/22/2019 - 11:06
from tkn