பிலிப்பைன்சில் டிரக் பள்ளத்தில் சரிந்ததில் 15 பேர் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸில் டிரக் வண்டி ஒன்று பள்ளத்தில் சரிந்ததில் சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடற்கரைக்கு சுற்றுலா சென்றுவிட்டு 30 பேரை ஏற்றியவாறு பயணித்த டிரக் வண்டியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

“பார்த்தவர்களின் சாட்சியத்தின்படி டிரக் வண்டி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. உண்மையான காரணத்தை கண்டறிய நாம் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று டிபோலி நகர பொலிஸ் பரிசோதகர் ஜோர்ஜ் டபயான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒன்று முதல் ஆறு வயதுக்கு இடையிலான சிறுவர்கள் இருப்பதோடு குறைந்தது 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய பயிற்சி இல்லாத ஓட்டுநர்கள் மற்றும் போதுமாக பராமரிக்கப்படாத வாகனங்கள் காரணமாக பிலிப்பைன்சில் வீதி விபத்துகள் அதிகம் இடம்பெறுகின்றன.

கடந்த ஜூனில் திருமணத்திற்கு முந்திய சம்பிரதாய நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு பயணித்த டிரக் வண்டி ஒன்று மலையில் இருந்து சரிந்த விபத்தில் மணமகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை