மாலியில் கட்டடம் இடிந்து 15 பேர் பலி

மாலி தலைநகர் பமாகோவில் கட்டுமானம் இடம்பெற்று வந்த மூன்று மாடி கட்்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தரைமட்டமான இந்தக் கட்டட இடிபாடுகளில் இருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்தக் கட்டட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மேல் மாடி ஏற்கனவே மக்கள் வசித்து வந்த கீழ் மாடிகள் மீது விழுந்ததாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த கட்டடமும் அட்டைகளால் அமைக்கப்பட்ட கட்டடம் போல் இடிந்ததாக கூறப்பட்டுள்ளது.

மாலியில் திட்ட அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்படுவதால் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை