ஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இடம்பெற்ற தொலை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் முன்னிலையில் தலிபான்களுடன் அமெரிக்கா, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் நிறைந்த காபுலின் கிழக்கு பகுதியில், தற்கொலைதாரி ஒருவர் காரை ஓட்டிச்சென்று திடீரென வெடிக்கச்செய்தார்.

இதில் அப்பகுதிகளில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் நொறுங்கின. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 42க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரு முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை