காட்டு யானையின் தாக்குதலில் 04 வீடுகள் சேதம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முன்னம்போடி வெட்டை மற்றும் சிராஜ் நகர் கிராமங்களுக்குள் சனிக்கிழமை (14) இரவு உட்புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு அரிசி மூடைகளை வெளியில் வீசி வீட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளன. இதன்போது முன்னம்போடி வெட்டை கிராமத்தில் மூன்று வீடுகளும் சிராஜ் நகர் கிராமத்தில் ஒரு வீடுமாக நான்கு வீடுகள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. யானைகள் தமது கிராமத்திற்குள் உட்புகுவதால் வீடுகளில் அச்சத்துடன் இருந்து கண்விழித்து காவல் காப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தோப்பூர் குறூப் நிருபர்

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை