கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை பிரஜையல்ல; மனு ஒக். 02

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்பதை இடைநீக்கம் செய்வதற்கான உத்தரவு கோரி தாக்கல் செய்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை மறுதினம் (02) விசாரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை  குடிமகனாக ஏற்பதை இடைநிறுத்தி, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு உத்தரவொன்றை வழங்குமாறு, பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் புரவெசி பலய அமைப்பின் இணை அழைப்பாளரும் சமூக ஆர்வலருமான காமினி வியங்கொட ஆகியோர், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Mon, 09/30/2019 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை