அறுகம்பையில் உலக கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டு போட்டி

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் இடம்பெறவுள்ள உலக கடலலை நீர்ச்சறுக்கல் (சேர்பிங்) விளையாட்டு தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் அறுகம்பே பிரதேசத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள முப்படையின் உயர் அதிகாரிகள், பொத்துவில் பிரதேச செயலாளர்,பொத்துவில் பிரதேச சபை தவிசளார், உல்லாச ஹோட்டல் உரிமையாளர்கள், அரச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலக கடலலை நீர்ச்சறுக்கல் (சேர்பிங்) விளையாட்டு போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அறுகம்பே கடல் பிரதேசத்தில் நடைபெறள்ளது.

இதில் உலகின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடலலை நீர்ச்சறுக்கல் வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை