நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

மலையக பகுதியில் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக லக்‌ஷபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர் கொள்ளவு 28ஆம் திகதி காலை 8.30 மணியக்கு 14 அடி நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகவும் 27ஆம் திகதியன்று காலை 8.30 மணியிலிருந்து 28ஆம் திகதி காலை 8.30 காலப்பகுதியில் 2.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டதுடன், கெனியோன், லக்‌ஷபான, நவலக்சபான,பொல்பிட்டிய,விமலசுரேந்திர மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளவை எட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

மஸ்கெலியா நிருபர்

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை