கிளிநொச்சி, வட்டக்கச்சி காணி அகழ்வில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை

கிளிநொச்சி வட்டக்கச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டிற்கு அண்மித்த பகுதிகளிலுள்ள அவரது சகோதரனது காணிக்குள் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் எந்தவித பொருட்களும் மீட்கப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆறுமுகம் வீதி வட்டக்கச்சியிலிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டிற்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரனின் 884 மற்றும் 885 ஆகிய இலக்கக் காணிகளில் ஆயுதங்கள் புதைத்து வைப்பதிருப்பதாக வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜாவின் கட்டளைக்கு அமைவாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த இரு காணிகளிலும் அடையாளப்படுத்தப்பட்ட இரு இடங்களையும் நீதவான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு கிராம அலுவலர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகழ்வுப்பணிகளின் போது கூரை( தரப்பாள்) விரிப்பின் ஒரு பகுதி மாத்திரமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அகழ்வுப்பணி மேற்கொள்ளும் பொருட்டு நேற்று காலை முதல் குறித்த பிரதேசத்தில் அதிகளவான இராணுவத்தினர். பொலிசார். விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தது.அதேவேளை அம்பியூலன்ஸ் வண்டியும் சுமார் ஆறு மணி நேரம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரந்தன் குறூப் நிருபர்

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை