ஒன்றரை வயது குழந்தை கடலில் மூழ்கி பலி

கைபேசியில் அம்மப்பா பேசிக்ெகாண்டிருக்ைகயில் விபரீதம்

அம்மப்பாவுடன் கடற்கரைக்குச் சென்ற ஒன்றரை வயது குழந்தை கடலில் மூழ்கிப் பலியான சம்பவமொன்று நேற்று (06) நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது. குழந்தையை அழைத்துக் ெகாண்டு கடற்கரைக்குச் சென்றவர் கைப்பேசியில் மூழ்கியவாறு குழந்தையைக் கவனிக்காது சென்றுள்ளார்.

அப்போது குழந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேர்ந்த இல்யாஸ் முஹம்மட் ஆதில் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நிந்தவூர் குறூப் நிருபர் 

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை