முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலம், வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் திறந்து வைக்கபட்டது.
இன்று (11) காலை 9.30 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி.விக்னேஸ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அதன்பின்னர், காலை 10.30 மணியளவில் கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம. தியாகராஜா, கட்சியின் யாழ், வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், ஶ்ரீ ஆகியோர் உள்ளிட்ட பல இளைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
Sun, 08/11/2019 - 12:57
from tkn