வடக்கில் முன்னெடுக்கப்படும் கம்பரெலிய திட்டத்தில் ஊழல்

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கம்பரெலிய திட்டத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

கம்பரலிய திட்டத்தினூடாக பல திட்டங்கள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கின்றன. அதிலும் பல திட்டங்களிலும் ஊழல் மிக மோசமாக தலைவிரித்தாடுகின்றது.

குறிப்பாக கம்பரெலிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் ஊழல்களில் ஈடுபடுவதாக பலரும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். ஆயினும் இவ் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

அதேபோல இரணைமடு விவகாரம் தொடர்பிலான அறிக்கையை ஆளுநர் வெளியிடாமல் இருக்கின்றார். ஆகவே அந்த அறிக்கையை இனியும் தாமதப்படுத்தாமல் வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை