ஒருதொகை சிகரெட்டுக்களை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து அச்சிகரெட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30வயதுடைய இச்சந்தேகநபர் நேற்று (30) சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 50 கார்ட்டன்கள் கொண்ட 600,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sat, 08/31/2019 - 09:27
from tkn