குப்பையுடன் சென்ற லொறி விபத்து; சாரதி படுகாயம்

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் புத்தளம் கரிக்கட்டைப் பகுதியில் நேற்று (14) காலை விபத்துக்குள்ளானது.

விபத்தில் டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பிலிருந்து அறுவைக் காடு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் டிப்பர் வண்டியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற போது சாரதி மட்டுமே பயணித்துள்ளார்.இதில் படுகாயமடைந்த சாரதி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கற்பிட்டி தினகரன் விசேட நிருபர்

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை