நினைவேந்தலுக்கு அழைப்பு

செஞ்சோலை படுகொலை:

செஞ்சோலையில் உயிர்நீத்த மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் 53 மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பின் ஒரு கட்டமாக இக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துவிட்டன.

அந்த வகையிலே வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நாளை வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் காலை 9 மணிக்கு செஞ்சோலையில் உயிர்நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அஞ்சலி நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் அனைவரையும் கலந்துகொண்டு நினைவு கூர வருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

மாங்குளம் குறூப் நிருபர்

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை