அரபா விளையாட்டுக் கழக பி அணி சம்பியன்

தம்பலகாமம் அரபா அல் ஹிக்மா பிறிமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அரபா விளையாட்டுக் கழக பி அணி 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அரபா அல் - ஹிக்மா விளையாட்டு கழகத்தினால் வருடம் தோறும் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இவ்வருடமும் மிக சிறப்பாக நடைபெற்றது.

இப் போட்டியானது அரபா விளையாட்டுக் கழக வீரர்கள்

ஏ,பி,சி,டி,இ,எப் என ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடாத்தப்பட்டது.

இதன் இறுதி போட்டி (25) அல் ஹிக்மா பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அரபா விளையாட்டுக் கழக பி அணியும் சி அணியும் மோதிக் கொண்டன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி வரை எந்தவொரு அணியும் கோல் எதனையும் போடாததனால், ஆட்டம் சமநிலையில் நிறைவு பெற்றது. இதன் காரணமாக வெற்றி தோல்வி பெனால்டி உதை மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

பெனால்டி உதையில் அரபா பி அணி 5 : 3 என்ற கோல் கணக்கில் அரபா சி அணியை தோற்கடித்து, 2-19 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இப்போட்டியின் அதிதிகளாக தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.வை. இமாம்தீன் மற்றும் தாலிப் அலி, முன்னாள் பிரதேச சபை தலைவர் வாஹீட் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

கிண்ணியா மத்திய நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை