களு கங்கை மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக, நீர்பாசனத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள களு கங்கை மற்றும் தவலம பிரதேசத்திலுள்ள கிங் கங்கை நிரம்பி வழியும் அபாயம் உள்ளது.
எனவே இரத்தினபுரி மற்றும் தவலம பிரதேசங்களிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் நீர்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நேற்றிரவு (29) அதிக மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sat, 08/31/2019 - 12:45
from tkn