சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாற்றாற்றல் கொண்டவர்களுக்காக 4 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
மடு திருத்தலத்திற்கு சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் சார்பில் வருகை தந்த அலவா குணரத்தின தேரர் இச் சக்கர நாற்காலிகளை மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளாரிடம் கையளித்தார். நிகழ்வில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க,மடு பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் குறூப் நிருபர்
Tue, 08/13/2019 - 06:00
from tkn