ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு

ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரி ஆசிரியை திருமதி ஜே.எம்.லாபிரின் சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் பாடசாலையில் நடைபெற்றது.

அதிபர் றினோஸ்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இதன்போது, ஓய்வுநிலை ஆசிரியை ஜே.எம்.லாபீர் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பத்திரம், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், குடும்ப உறவினர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை