அரிசி ஆலை, கடை அறைகளுக்கு சேதம்
அக்கரைப்பற்று ஆலிம் நகர் கிராமத்துக்குள் யானையொன்று புகுந்து அரிசி ஆலையொன்றையும் கடை அறைகள் இரண்டையும் சேதப்படுதியுள்ளதாக அறிவிக்கபடுகின்றது. இச் சம்பவம் நேற்று (28) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அரிசி ஆலையையும் கடை அறைகள் இரண்டையும் இலக்குவைத்தே இந்த யானை சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அரிசி ஆலையிலிருந்த நெல்லை பெருமளவு உண்டதாகவும், அங்கிருந்த தள பாடங்களுக்கும் கடை அறையிலிருந்த பொருட்களுக்கு பாரிய சேதத்தை உண்டுபண்ணியுள்ளது.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் சிலநாட்களுக்கு முன்னரும் இக்கிராமத்துக்கு யானைகள் வந்து தென்னங்கன்றுகளை பிடுங்கி வீசியுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் கிராமவாசிகள் வெளியே நடமாட அஞ்சுவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒருவருடத்துக்கு முன்னர் இதே பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரையும் மிதித்துக்கொன்றுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மற்றும் போலிசாருக்கும் முறைட்டுள்ளதொடு, இந்நிலை தொடருமிடத்து இக்கிரமத்தை விட்டு நகரவேண்டிய நிலைமை ஏற்படலாமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
(அட்டளைசேனை குறூப் நிருபர்)
from tkn