இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலி

காசா பகுதியின் வடக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் மேலும் ஒரு பலஸ்தீனர் படுகாயம் அடைந்திருப்பதாக பலஸ்தீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 24, 26 மற்றும் 27 வயது இளைஞர்களே இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசாவை பிரிக்கும் எல்லை வேலியை ஒட்டி ஹெலிகொப்டர் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேலிய போர் விமானங்கள் பயிர் நடப்பட்ட திறந்த வெளி பகுதி மற்றும் காசாவை தளமாகக் கொண்ட போராட்டக் குழுவின் இலக்குகள் உட்பட வடக்கு காசா மீது குண்டுகளை வீசின. மறுபுறம் காசாவில் இருந்து மூன்று ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம் அதில் இரண்டு இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை