உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சை குறித்து எம்.சி.சி முடிவு

லண்டனில் உள்ள லொர்ட்ஸில் நடந்த எம்.சி.சி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில், உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான ஐ.சி.சி உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் போது மார்ட்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசைதிரும்பி பவுண்டரிக்கு சென்றபின், ஓவர் த்ரோவ் விதி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது இது இறுதிப்போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது.

இதனையடுத்து, எம்.சி.சியின் ஓவர் த்ரோவ் விதியை மறு பரிசீலினை செய்யும் படி முன்னாள் வீரர்கள் உட்பட பலர் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், ஓகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 12 என இரண்டு நாட்கள் லோர்ட்ஸில், முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் மைக் கேட்டிங் தலைமையில் எம்.சி.சி உலக கிரிக்கெட் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட ஓவர் திரோவ் சர்ச்சை தொடர்பான விதி 19.8 பற்றி விவாதிக்கப்பட்டது. சட்டம் தெளிவாக இருப்பதாக உலக கிரிக்கெட் குழு உணர்ந்தது. ஆனால் இந்த விவகாரம் 2019 செப்டம்பர் மாதம் சட்ட துணைக்குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் என்று எம்.சி.சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை