அமெரிக்காவில் ஆறு பொலிஸாரை காயப்படுத்திய துப்பாக்கிதாரி சரண்

அமெரிக்காவின் பில்டோபியா நகரில் ஆறு பொலிஸார் காயமடைந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கும் ஆண் துப்பாக்கிதாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது. போதைப் பொருள் பிடியாணை ஒன்று தொடர்பில் பொலிஸார் செயற்பட்டபோதே துப்பாக்கிதாரி அவர்கள் மீது சூடு நடத்த ஆரம்பித்துள்ளார்.

துப்பாக்கிதாரியை சரணடையும்படி பொலிஸார் கேட்ட நிலையில் இரு தரப்புக்கும் இடையில் ஏழு மணி நேரம் இழுபறி நீடித்தது.

இந்நிலையில் 36 வயது மொரிஸ் ஹில் என்ற சந்தேக நபர் வீட்டுக்குள் இருந்து கைகளை உயர்த்தியபடி வெளியே வரும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது. சந்தேக நபர் சரணடைவதற்கு தான் உதவியதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிதாரியுடன் குறித்த வீட்டில் சிக்கி இருந்த இரண்டு பொலிஸார் மற்றும் மூன்று சிவிலியன்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை