கோழிகளுடன் சென்ற லொறி டிப்பருடன் மோதி விபத்து

இருவர் பலி, ஒருவர் படுகாயம்

 மட்டு. நாவற்குடாவில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதான வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளையிலிருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு

காத்தான்குடி நோக்கிச் சென்ற சிறிய லொறியொன்று முன்னால் சென்ற டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறியின் சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நாவற்குடாவில் வைத்து முன்னால் சென்ற கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் டயர் வெடித்த நிலையில் பின்னால் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மோதியுள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களை பொது மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிசார் சென்று ஆரம்பக் கட்ட விசாரணைகளை நடத்தினர்.

ஏறாவூரைச் சேர்ந்த பதுறுதீன் ஹில்மி ஹசன்(வயது 25) தாவூத் றிழ்வான்(வயது 28) இருவருமே உயிரிழந்தவர்களாவர். பதுறுதீன் அகமட் றிஸ்மி((வயது 20) காயமடைந்துள்ளார். வதுறுதீன் ஹில்மி ஹஸன், வதுறுதீன் அகமது றிஸ்மி ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாகும். இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை