தரம் ஐந்து புலமைப்பரீட்சை: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தரம் ஐந்து புலமைப் பரீட்சை நேற்று(04) நாடு முழுவதும் ஆரம்பமானது.பெற்றோர்களின் ஆசீர்வாதம்,விசேட ஆராதனைகளுடன் மாணவர்கள் பரீட்சைக்குச் சென்றனர்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு முன்பாக,மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்ததையும் காண முடிந்தது.

இறைவழிபாட்டில் ஈடுபட்ட அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலய மாணவர்கள் ஆலய குருமாரின் ஆசியையும் பெற்றுக் கொண்டனர். பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

 

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை