உருகுவே கால்பந்து வீரர் தியாகோ போர்லான் ஓய்வு

உருகுவே கால்பந்து அணியின் மூத்த வீரர் தியாகோ போர்லான் கால்பந்து விளையாட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

40 வயதாகும் போர்லான், தனது 21 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில் 250 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடரில், உருகுவே அணி அரையிறுதி வரை முன்னேற முக்கிய காரணமாக அமைந்தார்.

அந்த தொடரில் 5 கோல்கள் அடித்து தங்கப் பந்து விருதை வென்றார்.

அதேபோன்று 2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் உருகுவே கிண்ணத்தை வென்றது. பெரு அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்லான் இரண்டு கோல்கள் அடித்தார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இவர் விளையாடியபோது, பிரீமியர் லீக் மற்றும் எப்.ஏ கிண்ணங்களை அந்த அணி வென்றது.

அத்துடன் யூரோ கிண்ணத்தை அத்லெடிகோ மெட்ரிட் அணி வெல்லவும் உதவியாக இருந்தார்.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை