வட மாகாணத்தில் காற்றுடன் கூடிய நிலைமை

வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீற்றர் வரை) வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 55-65 கிலோமீற்றர் வரை) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என்று  எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Sat, 08/03/2019 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை