அமெரிக்க சிறைக்குள் செல்வந்தர் தற்கொலை

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹொலிவுட் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மிகவும் நெருக்கமான நபராக அவர் விளங்கியதாக கூறப்படுகிறது. 66 வயதான எப்ஸ்டீன், சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிறைச்சாலையில் தமது அறையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்த எப்ஸ்டீனின் சடலத்தை சிறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே அவர் கடந்த ஜூலை மாதத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற போது காப்பாற்றப்பட்டார்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை