செப்.3 கொள்கைப் பிரகடனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியிலமைந்துள்ள
சு.கவின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி சம்மேளனத்தை நடத்த தீர்மானித்திருந்தோம். என்றாலும், சுகததாஸ விளையாட்டரங்கை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் மறுநாள் செப்டெம்பர் 3ஆம் திகதி கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்தவுள்ளோம்.
கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் இடம் பெற்றுவருதுடன், தொகுதி ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் பொதுக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தவுள்ளோம். கிராம மட்டத்தில் மிகவும் பலமான கட்சியாக நாங்கள் உருவெடுத்துள்ளோம். எமது எதிர்கால அரசியல் நடவடிக்கள் மற்றும் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவோமென கேள்வியெழுப்பும் அனைவருக்கும் செப்டெம்பர் 3ஆம் திகதி பதிலளிக்கப்படும்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn